செவ்வாய், 18 ஜூன், 2013

பொது அறிவு:- *




பொது அறிவு:-

* 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி.

* `லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்.

* `வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது, ஏலக்காய்.

* பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.

* இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்).

யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.

நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.

உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.

எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.

முதலைக்கு 60 பற்கள் உண்டு.

* உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.

* வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'.

* இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.

* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.

* `கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட்.

* கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'.

* காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.

* `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு.

* `திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம்.

திங்கள், 17 ஜூன், 2013

பெண் என்னும்!!!!!!
கருவில் அரும்பி
உருவம் தரித்து
பருவம் அடையுமுன்
பலப்பல பக்குவங்கள்...
பதறாமல் பெறுபவள்...!
அரும்பும் மலராய்
அழகாய் மணம்வீசி
அன்பின் ஆழத்தை
அனைவரிடமும் காட்டி
வலம் வருகின்ற
வண்ணத் தேர்...!
எதையும் இயன்றவரை
எடுத்துச் செய்திடும்
உறுதியான உள்ளத்துடன்
உலகை வலம் வரும்
உன்னத படைப்பு...!
அகத்தில் அன்புடனும்
புறத்தில் பண்புடனும்
பெண்மைக்கு உண்மையுடனும்
பிரமிக்கும் திறமையுடனும்
பிரகாசிக்கும் சுடர்...!
பொறுமைக்கு இலக்கணமாய்
புனிதத்திற்கு பொருத்தமாய்
அடக்கம் அறிந்தவளாய்
அகங்காரம் தொலைத்தவளாய்
அன்பிற்கு பணிபவள்...!
ஆயிரம் அலுவல் செய்தும்
அலுக்காத அன்னையுள்ளம்...
அன்பாய் ஓர் வார்த்தைக்காய்
அடை காக்கும் பெண்ணுள்ளம்...!



நான்,

பல்லாங்குழி ஆடிய திண்ணைக்கும்
பாண்டி ஆடிய தெரு வீதிக்கும்

பட்டம் விட்ட மொட்டைமாடிக்கும்
பாடித் திரிந்த வயல் வெளிக்கும்

துரத்திப் பிடித்த தும்பிக்கும்
பிடிக்காமல் விட்ட பட்டாம்பூச்சிக்கும்

கையில் ஏந்திய ஆட்டுக் குட்டிக்கும்
காத்துக் கிடந்த கனமழைக்கும்

விழுந்து விழுந்துக் கற்ற மிதிவண்டிக்கும்
விரட்டிச் சென்ற டயர் வண்டிக்கும்

திருடித் தின்ன மாங்காய் தோப்புக்கும்
திட்டித் தீர்த்த காவல்காரனுக்கும்

மறக்காமல் சொல்லிடுமா இந்த ஊர்க் குருவி
ஊர் வருகிறேன் என்று..

செவ்வாய், 7 மே, 2013

இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!!!!

இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!!!!
************************************

புகைப்படத்துடன் வந்து 
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா! 

அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!

நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!

முழுதாய் புரிவதற்க்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!

எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!

பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாழாய்ப் போன வெளி நாடு!!

பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!

வறண்டுப் போன கண்களும்
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!

கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!

துக்கம் தொண்டையை அடைக்க;
உறுண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய் துடைத்துவிட்டு ;

உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் - இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!


சனி, 20 ஏப்ரல், 2013

உயிரே...


உயிரே...

என்னருகில் உறவுகள்
ஆயிரம் இருந்தும்...

என்னருகில் நீ
இல்லாததால்...

கானகத்தில் நிற்கும்
தனி மரம் போல்...

என்னுள் சலனங்கள்...

உன்னோடு நான்
இருக்கும் ஒவ்வொரு வினாடியும்...

பல உறவுகள்
என்னுடன் இருபதுப்போல...

ஓர் உணர்வு...

என்னை நீ
பிரிந்த போது...

உன் நினைவுகள்
அவ்வபோது வந்து செல்லும்...

சுகமாகவும்
சோகமாகவும்...

தனிமையை
ரசித்தேன் அன்று...

உன்னை கண்ட நாள்
முதல் வெறுத்தேன் தனிமையை...

இன்று தனிமைதானடி
சுகமாக...

என் உயிரே
வருவாயா என்னருகில்.....


செவ்வாய், 16 ஏப்ரல், 2013

பெண்கள்



1. ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

2. புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தது மே 30, 1431

3. கைவிளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தது மே 12, 1820

4. இதுவரை ஒன்பது பெண்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.

5. உலகின் முதல் விண்வெளி வீராங்கணை வாலண்டினா தெரஸ்கோவா 45முறை பூமியை வெற்றிகரமாக வலம் வந்தவர்.

6. இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற மேடம் கியுரி சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்கார சிறுமியாக தம் வாழ்க்கையை பல கஷ்டங்களுக் கிடையே துவக்கினார்.

7. ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் ஆரதி சாகா.

8. ஆங்கிலக் கால்வாயை மிக வேகமாக நீந்திய ஒரே ஆசிய வீராங்கனை அனிதா சூட். 81/4 மணி நேரத்தில் நீந்திக்கடந்தார்.

9. இந்திய விமானப்படையில் முதன் முதலில் பெண்கள் ஜூலை19,1993ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

10. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்.

11. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

12. உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா.

13. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் திருமதி பாத்திமா பீவி.

14. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டில்.

15. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியுசிலாந்து.

16. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி அண்ணா சாண்டி.

17. இந்தியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெண்மணி

18. மிகக் குறைந்த வயதில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்மணி மார்டினா ஹிங்கிஸ்.

19. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தி

20. இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பேனர்ஜி

21. இந்தியாவை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.

22. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் சகுந்தலா தேவி.

23. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாசாவ்லா

24. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் மீரா குமார்.

25. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுஜேதா கிருபாளினி.


சில உலக நாடுகளின் பழைய பெயர்களும் - புதிய பெயர்களும்.





டச்சு கயானா - சுரினாம்

அப்பர் வோல்டா - புர்க்கினா பாஸோ

அபிசீனியா - எத்தியோப்பியா

கோல்டு கோஸ்ட் - கானா

பசுட்டோலாந்து - லெசதோ

தென்மேற்கு ஆப்பிரிக்கா - நமீபியா

வட ரொடிஷியா - ஜாம்பியா

தென் ரொடிஷியா - ஜிம்பாப்வே

டாங்கனீகாம், சன்ஸிபார் - தான்சானியா

சாயிர் - காங்கோ

சோவியத் யூனியன் - ரஷ்யா

பர்மா - மியன்மார்

கிழக்கு பாக்கிஸ்தான் - வங்காளதேசம்

சிலோன் - ஸ்ரீலங்கா

கம்பூச்சியா - கம்போடியா

பாரசீகம், பெர்ஷியா - ஈரான்

மெசபடோமியா - ஈராக்

சியாம் - தாய்லாந்து

பார்மோஸ் - தைவான்

ஹாலந்து - நெதர்லாந்து

மலாவாய் - நியூசிலாந்து

மலகாசி - மடகாஸ்கர்

பாலஸ்தீனம் - இஸ்ரேல்

டச் ஈஸ்ட் இண்டீஸ் - இந்தோனேசியா

சாண்ட்விச் தீவுகள் - ஹாவாய்

அப்பர் பெரு - பொலிவியா

பெக்குவானாலாந்து - போட்ஸ்வானா

புதன், 10 ஏப்ரல், 2013

வியந்து தான் போவீர்கள் -

* சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன.

* மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள் உள்ளன.* மண்புழு தோல்மூலம் சுவாசிக்கும்.



* தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களை பிரித்தறிய முடியும்.

* பூச்சி இனங்களில் தும்பியின் கண்கள் கூர்மையானவை.


* பட்டாம் பூச்சிக்கு நூரையீரல் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள `ஸ்பிராக்கிள்' என்னும் துளைகள் வழியாக சுவாசிக்கின்றன.

* ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் நத்தையில் காணப் படுகிறது. இதனால் அவை ஹெர்மப்ரோடைட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
* யானையின்துதிக்கை ஒரு லட்சம் தசைகளால் ஆனது. அதன் இதயம் நிமிடத்திற்கு 28 தடவை மட்டுமே துடிக்கின்றன.


* பூசணிக்கொடியின் வேர்கள் 2.4 கி.மீ. நீளம் வரை வளரும்.

* நத்தைக்கு 25 ஆயிரம் பற்கள் உண்டு.

* சாம்பிராணி ஒரு மரத்தின் பிசின் ஆகும்.

* அன்னாசிப் பழத்திற்கு விதைகள் கிடையாது.

* கரப்பான் பூச்சியின் இதயம் 13 அறைகளைக் கொண்டது.
* தேனீ நம்மைக் கொட்டியதுமே வலி ஏற்படக் காரணம் அது பார்மிக் என்னும் அமிலத்தை நம் உடம்பில் செலுத்துவதாகும்.

* தவளையின் இதயத்தில் மூன்று அறைகள் உள்ளன.



* ஈசலுக்கு ஜீரண உறுப்பு கிடையாது. அதனுடைய ஆயுட்காலம் ஒரே ஒரு நாள் மட்டுமே. 24 மணி நேரத்திற்கு மேல் அதனால் வாழ முடியாது.

* கறையான் வெப்பம் மிகுந்தநாடுகளில் இருக்கும். ஆண்,பெண் கறையான், ஆணும் பெண்ணும் அல்லாத கறையான் என அவற்றில் மூன்று வகை உண்டு.

* வியர்வையை வெளியேற்றவே நாய்கள் நாக்கை தொங்க விடுகின்றன. ஏனெனில் நாய்களுக்கு மற்ற இடங்களில் வியர்வைச் சுரப்பிகள் இல்லை





* பச்சோந்தி அடிக்கடி தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் காற்றை நிறைய உள்ளிழுத்து சுய உருவை விட பல மடங்கு பருத்துக் காணப்படும். இதனுடைய நாக்கு மிகவும் நீளமானது. 10 அங்குலத்திற்கு அப்பால் உள்ள பூச்சியை ஒரேயொரு நொடியில் கவரக்கூடிய சக்தி படைத்தது. இவையெல்லாவற்றையும் விட மிகவும் வியப்பை ஏற்படுத்துவது பச்சோந்தியின் கண்கள்தான். ஒரு கண் நேரில் இருப்பதை உற்று நோக்க, மற்றொரு கண் பின்னால் இருப்பதை பார்க்கும். அற்புதமான அமைப்பை உடையது. உலகில் வேறு எந்த உயிரினத்திற்கும் இந்த அமைப்பு கிடையாது.

* ஆஸ்திரேலியாவிற்கு அருகில் நவ்ரு என்னும் மிகச் சிறிய தீவு இருக்கிறது. இந்நாட்டின் மக்கள் எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை. வசிப்பதற்கு வீடு, உண்ண உணவு, உடுக்க உடை போன்ற அத்தியாவசியத் தேவை அனைத்தையும் அரசாங்கமே கவனித்துக் கொள்கிறது. பாஸ்பேட் உரம் இயற்கையாகவே நவ்ரு நாட்டில் கிடைப்பதால் அதை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருமானத்தை ஈட்டுகிறது. வெளிநாட்டுக்குச் செல்லவேண்டும் என்றால் கூட அரசாங்கமே எல்லாச் செலவுகளையும் ஏற்று குடிமக்களை அனுப்பி வைக்கிறது.



* மத்திய தரைக் கடல் பகுதியில் தென் கிழக்கு பிரான்ஸ் எல்லையோரம் அமைந்துள்ள மிகச் சிறிய தீவு மோனாகோ. இது மொத்தமே அரை மைல் சதுர பரப்பளவு கொண்டதாகும். ஆனால் அளவை வைத்து இந்த தீவின் பொருளாதாரத்தை எடை போட்டு விட வேண்டாம். ஏனெனில் உலக கோடீஸ்வரர்களின் சொர்க்க புரியாக இந்த தீவு திகழ்கிறது. இங்கே ஒவ்வொரு கோடீஸ்வரரும் அவரவருக்குச் சொந்தமான ஆடம்பர, அலங்காரப் படகுகள் மூலம்தான் மதிக்கப்படுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் வரு மானத்தைக் கொண்டே இந்தத் தீவில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.









* சுவீடன் நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் அந்நாட்டு அரசாங்கம் தனித்தனி எண்களைக் கொடுத்துள்ளது. அரசு நிறுவனங்கள் அவர்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள எண்களைக் கொண்டுதான் குறிப்பிட்டு வருகிறது. ஆண்களுக்கு இரட்டைப் படை எண்களும், பெண் களுக்கு ஒற்றைப்படை எண்களையும் கொடுத்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்து சில காலம் தங்குவோருக்கும் கூட இது போன்ற எண்கள் கொண்ட அடையாள அட்டையை தருகிறார்கள். இதன் மூலம் ஒவ்வொருவரது தேவையும் நடவடிக்கையும் கவனிக்கப்படுகிறது.




* 60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர் அணிந்திருக்கும் (tie) டையின் நிறத்தை வைத்தே அவர் எந்த ஊர்க்காரர் என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடியும். பச்சைநிற டை கட்டியிருந்தால் அவர் பாஸ்டனைச் சேர்ந்தவர். சிவப்பு நிறம் என்றால் அவர் சிகாகோகாரர். இப்படி ஒவ்வொரு பெரிய நகரத்துவாசிகளும் தங்க ளுக்கென்று விசேஷமாக டை தயாரித்துக் கொண்டார்கள். அதில் குறிப்பிட்ட கோடு நம்பர் களையும் குறிப்பிட்டு வைத்தார்கள். அப்போதுதான் நவீன டை அறிமுகமாகியிருந்ததால் அதை இரவில் கூட பலர் கழற்றாமல் அணிந்து கொண்டே தூங்கினார்கள்....














வியாழன், 4 ஏப்ரல், 2013

வெளிநாட்டு வாழ்க்கை




வெளிநாட்டில் வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது எது? யார் என்ன சொன்னாலும் நாட்டில் இருப்பவர்கள் இன்னும் வெளிநாடு வர துடிப்பதுக்கு எது காரணம்.

எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம் பணம்.
...
சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை. வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை.

உண்மை வரிகள் ....

•பிறந்த நாட்டை விட்டு பிரிந்து உறவுகளை விட்டுவிட்டு தனியனாய் உரிமைகள் அற்று சிதறி கற்பனை வாழ்வில் மட்டுமே கனவுகளில் லயித்து நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது எங்கள் வாழ்க்கை..!

•எனக்கொரு கனவு கடனில் இருக்கும் வீட்டை என் காலத்திலாவது கட்டி மீட்டிட வேண்டும்..!

•நண்பனுக்கொரு கனவு தன்னோடு கஷ்டம் போகட்டும் தன் தமையன்களுக்காவது நல்ல படிப்பை நல்கிட வேண்டும்..!

•அறைத் தோழன்னுக்கோர் கனவு அப்பாவின் ஆப்பரேசனுக்கு பணம் சேர்த்து மீளாத் துயரில் இருக்கும் குடும்பத்தை மீட்டிட வேண்டும்..!

•தோழியின் கனவு தான் முதிர்கன்னி ஆகிவிட்ட போதும் தன் தங்கைகளுக்கு திருமணம் செய்து பார்த்து மகிழ்ந்திட வேண்டும்..!

•இப்படியாய் நாங்கள் கனவுகள் வெவ்வேறு பணம் ஒன்றே பிரதானமாய் எல்லோரும் வெளிநாட்டில்..!

•காய்ச்சல் வந்ததென்றால் கஞ்சி கொடுக்க தாயில்லை.
அன்பை பகிர்வதற்கு அருகில் என் தங்கை இல்லை.
அதிகாரம் செலுத்திட அருகாமையில் அப்பா இல்லை.
சோகம் சுமந்தோமேன்றால் ஆற்றுவதற்கு ஆளில்லை.
சொல்லொண்ணா துயரில் நாங்களும் அனாதைகள்தான்.
நாடுகடந்து வாழ்வதால் நாங்களும் அகதிகள்தான்..!

•அம்மா அழைக்கிறாள் உன்முகம் பார்த்து நாளாச்சு.. கண்ணுலையே நிக்குற.. வந்து காட்டிட்டு போ உன் முகத்தைன்னு..!

•தகப்பன் சொல்கிறார் தங்கச்சிக்கு மாப்ள பாத்துட்டேன்.. கல்யாணத்துக்கு பணம் பத்தல அனுப்பி வைப்பான்னு..!

•தம்பி கேட்கிறான் அண்ணா..நான் நடந்தே பள்ளிக்கூடம் போறேன் சைக்கிள் ஒன்னு வாங்கி தாணான்னு..!

•தங்கை கேட்கிறாள் கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வருவியான்னு..!

•முகத்தில் மலர்ச்சி காட்டி உள்ளத்தால் அழுகின்றோம் எப்போ விடியும் எங்களின் வாழ்க்கையென்று..!

திங்கள், 1 ஏப்ரல், 2013

தமிழகத்தை பற்றி அறிந்து கொள்வோம்


தெரிந்து கொள்ளுங்கள்.



... 1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்­த ூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
...4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்
பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

ஞாயிறு, 31 மார்ச், 2013

நட்பு

கரைந்திடும் நிமிடங்கள்
நகர்ந்திடும் நாட்கள்
விலகிடும் வினாடிகள்
இவை சேர்ந்ததோ நம் நட்பு
நேற்று இன்று நாளை
... நாளை சூடும் மாலை
நேற்று சிந்திய கண்ணீர்
இன்று துவளும் தோல்வி
யாவற்றையும்
ஒரே புன்னகையில்
ஒரே வருடலில்
ஒரே ஆதரவில்
விலக்கிடும் கரமே
நம் நட்பு


 


சனி, 30 மார்ச், 2013

பொது அறிவு !!




1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
டி பி ராய்.

... 2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
ஜான் சுல்லிவன்.

3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.

4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
சென்னை.

5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
வித்யா சாகர்.

6) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.

7) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

8.) இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
மாடம் பிகாஜி காமா.

9) கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.

10) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?
மகாத்மா காந்தி.



ஞாயிறு, 17 மார்ச், 2013

அன்பே!!!


உன்னை நினைப்பதால் உனக்கு 
ஆயுள் கூடுமென்றால்
உனக்கு இறப்பே
இல்லையடா !!!!

சில நிமிடங்களுக்காக !!!


வார்த்தைகளுக்கு
வறுமையில்லை
இருப்பினும்
காத்திருக்கிறேன்
கவிதைஎழுத
நீ.............எனை
கடந்து செல்லும் அந்த
சில நிமிடங்களுக்காக!!!
 

அம்மா!!


நான் நேசித்த முதல் பெண்ணும்
என்னை நேசித்த முதல் பெண்ணும்
நீ தானே அம்மா!!!

வாழ்க்கையில் விட்டு கொடுத்து பாருங்கள்!!

பிறப்பது ஒரு முறை
வாழ்வதும் ஒரு முறை
பிறகு எதற்கு கோபம் எனும் வன்முறை
விட்டுக் கொடுங்கள் உங்களின் அன்பானவர்களை
என்றுமே விடாமல் இருக்க!!!!

தமிழர்கள் அத்தனை பேரும் இதை தெரிந்து கொள்ள வேண்டும்!!

‎1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred
...
1000 = ஆயிரம் -thouand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்துநூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் -?

10000000000000000000 = பரார்த்தம் —?

100000000000000000000 = பூரியம் -?

1000000000000000000000 = முக்கோடி -?

10000000000000000000000 = மகாயுகம் -?!

சனி, 16 மார்ச், 2013

அம்மா!!!


அன்று நம் தொப்புள் கொடியை
அறுத்தது நம் உறவை பிரிக்க
அல்ல...
அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு
வெட்டப்பட்ட ரிப்பன்...

திங்கள், 25 பிப்ரவரி, 2013

உங்களுக்கு தெரியுமா??




வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..
...
புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.

சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.

வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.

எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.

வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

பிரிவு ..


பல நாட்கள் பழகி ஒரு நாளில் பிரிந்து போகும் நாளை விட
பிரிந்த பல நாட்கள் கழித்து ஒரு நாள் சந்திப்போமே!!

வாழ்க்கை தத்துவங்கள்!!!


வாழ்க்கை என்பது பனைமரம் போல
ஏறினா நுங்கு,விழுந்தா சங்கு...
நீ செய்யும் தவறு கூட புனிதமாகும்
அதை நீ ஒப்புக்கொள்ளும் போது!!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை!
நினைத்தது எல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கை வேஸ்ட்,
நினைக்காதது நடந்தால் வாழ்க்கை டேஸ்ட்!!
மனசுக்கு பிடிச்சவங்க முன்னாடி அழுவதும் கஸ்டம்,
மனசுக்கு பிடிக்காதவங்க முன்னாடி சிரிக்கிறதும் கஸ்டம்!!!
 

சங்கத்தமிழ்(தொண்ணூறுக்கும் மேற்பட்ட மலர்கள்)

சங்கத்தமிழ்(தொண்ணூறுக்கும் மேற்பட்ட மலர்கள்)
''உள்ளகம் சிவந்த கண்ணேம் வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல்,அனிச்சம்
தண்யக் குவளை,குறிஞ்சி,வெட்சி,
செங்கொடு வேரி,தேமா,மணிச்சிகை
உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ்,கூவிளம்,
எரிபுரை,எறுழம்,சுள்ளி,கூவிரம்,
வடவனம்,வாகை,வான்பூங் குடசம்,
எருவை,செருவிளை மணிப்பூங் கருவிளை,
பயினி,வானி,பல் இணர்க்காயா,
விரிமலர்,ஆவிரை,வேரல்,சூரல்,
குறீஇப்பூளை,குறுநறுங்கண்ணி,
குருகிலை,மருதம்,விரிபூங்கோங்கம்,
போங்கம்,திலகம்,தேங் கமழ் பாதிரி,
செருந்தி,அதிரல்,பெருந்தண் சண்பகம்,
கரந்தை,குளவி,கடிகமழ் கலிமா,
தில்லை,பாலை,கல் இவர் முல்லை இவ போல் பிறவும்''

புதன், 20 பிப்ரவரி, 2013

கிளி

தன்
எதிர்காலம்
என்னவென்று தெரியாமல்
அடுத்தவர்கள்
எதிர்காலத்தைப்பற்றி
சொல்லி கொண்டிருந்தது
கூண்டுக்குள்
அடைப்பட்ட
கிளி!

தாயின் துடிப்பு

உனக்காய் துடித்த ஓர் இதயம்
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட துடிக்கிறது முதியோர் இல்லத்தில்!
என் மகன் எப்படி இருக்கிறானோ என நினைத்து?

இன்று உலக தாய்மொழி தினம் ..பிப்ரவரி-21


இன்று உலக தாய்மொழி தினம்
ஒருவருக்கு ஒருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பின்னாளில், இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது.



... உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக, பிரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள், ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில், "உருது மொழி' அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள், கோரிக்கை தெரிவித்தனர்.

கடந்த, 1952, பிப்., 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, யுனெஸ்கோ அமைப்பு, 1999ம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.

மௌனம்!

பக்கம் பக்கமாக பேச நினைக்கிறேன்
ஆனால்
உன்னிடம் பேசும் போது மட்டும் ஏனோ
முந்திக்கொள்கிறது
என் மௌனம் !!!

கனவில் உன் சிரிப்பு !!!

நீ சிரிக்கும் போதெல்லாம் சிந்தனை சிதறி
சிறைபட்டு நிற்கிறேன்!!
உன் சிரிப்பனும் பிடியில் மாட்டிக்கொண்ட
கூண்டு
கிளி நான் !!
என் நிலைமையோ தூண்டிலில் அகப்பட்ட மீன் !!
துள்ளித்திரிந்த காலம் போய் எந்நேரமும் துயிலே கதியான ...
எப்போதும் ஏக்கத்துடன் நீ வருவாய் என காத்துக்கொண்டிருக்கிறேன்
கனவில்!!

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

சட்டத்தில் இடம் உண்டா??????



லண்டனில் வாழ்கின்ற ஆங்கிலேயர் ஒருவரை சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய முடியுமா?????
விடை-வாழ்கின்ற ஒருவரை அடக்கம் செய்ய எந்த சட்டத்திலும் இடம் இல்லை.

ஒரு பொருள் கூட்டினால் பதினொன்று,பெருக்கினால் முப்பது அது என்ன???
விடை--ஆரஞ்சு.

உங்களுக்கு தெரியுமா????


ஒட்டகசிவிங்கி 20 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
செந்நரி 8 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

ராணி எறும்பு 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
பாக்டீரியா 20 நிமிடங்கள் வரை உயிர் வாழும்.
யானையின் இதய துடிப்பு நிமிடத்திற்கு 25 முறை துடிக்குமாம்.

பொது அறிவு


1.இளமையை புதுப்பிக்கும் அறிய கீரைகள் எவை ????
         பசலைகீரை, தண்டுக்கீரை.
2.சிவகாசியிலிருந்து பட்டாசுகள் ஏற்றுமதியாகும் முக்கியமான நாடுகள் எவை?
        அமெரிக்கா,கனடா,ஜெர்மனி.
3.டெல்லியின் பழைய பெயர் என்ன?
        இந்திரப்பிரஸ்தம்.
4.உலகிலேயே அதிக நாள் உயிர் வாழும் உயிரினம் எது?
       ஆமை.
5.தபால் தலையில் முதலில் இடம் பெற்ற இந்தியர்--மகாத்மா காந்தி .

பாரதி

 
பாரதி படத்துக்கு பூ தூவ ஆசை
     ஆனால்.....
கையில் இருப்பதோ ஜாதிமல்லி!!!!

திங்கள், 18 பிப்ரவரி, 2013

malli poo idly---joke

சென்னை ஹோட்டலில்.. "மதுரை மல்லிப்பூ இட்லி கேட்டு 1 மணி நேரம் ஆகுது... இன்னும் வரலையே...?" "மதுரை என்ன பக்கத்துலய இருக்கு.. உடனே கெண்டு வர.."

kichu kichu.....

"ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." "ஏன்..?" "பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.."

தாய்

ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்...

பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு...


... ஒரு கவளம் சோற்றை கூட

அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!

ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்கிறது...


உலக அதிசயம்..!


எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்

கருவறையை விட பாதுகாப்பான அறையை

குழந்தைக்கு யாரால் தர முடியும்..???


இறைவனின் வல்லமைக்கு இதனை விட

சான்று வேண்டுமா..???


இது பெண்மையின் மறுபிறவி…!


பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது,

பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்–ஆனால்

இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்......!!!!


குழந்தையாய்…

சிறுமியாய்…

குமரியாய்…

மனைவியாய் வளரும் உறவு

தாய்மையில் தான் தன்னிறைவு பெறுகிறது..!


கொஞ்சும் போது

தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே

தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்...!


நள்ளிரவில்,

குழந்தையின் அழுகை எல்லோருக்கும் எரிச்சல்,

தாய்மைக்குத் தான் பதட்டம்.....!!!


தாய்மையின் மகத்துவத்தை எத்தனை

தத்துவமாயும், தத்ரூபமாயும் சொல்லலாம்.





"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென்று"…

அனாதை இல்லம்


வீட்டின் பெயரோ அன்னை இல்லம்
அன்னை இருப்பதோ அனாதை இல்லம்!!!
என்ன கொடுமை சரவணா?

தாயே நீ !!!!!

தாயே நீ போட்ட எச்சில் தான்
நானும் ,எனக்கு பின் வரும் எனது
சந்ததியினரும் !!!!

அம்மா

 இந்த உலகத்தில் கடவுளுக்கு எப்படி உவமை இல்லையோ
அப்படியே உனக்கும் உவமையாக காட்ட வேறில்லை தாயே !!!!!
 

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

கவிதா

      உன் பெயரை கேட்ட பிறகு தான் தெரிந்தது
உன் பெற்றொருக்கும் கவிதை எழுத
தெரியும் என்று!!!!

thalaivar joke..ha ha ha

"தலைவர் அதிகமா முற்போக்கை விரும்பறாரா? பிற்போக்கை விரும்பறாரா? "ரெண்டையும் விட அதிகமா பொறம்போக்கைத்தான் விரும்புகிறார்."

doctors joke..

"போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?" "எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே, நர்ஸ்!"

doctors joke

நோயாளி: "இருமல் நிற்க மாட்டேங்குதுங்க...?" டாக்டர்: "அப்படின்னா அங்க உட்கார வையுங்க...! இல்ல படுக்க வையுங்க...!"

tamil jokes- weighing machine

"எடை மிசினில் ஏறி செருப்பைக் கையில் வச்சுக்கிட்டு எடை பார்க்கிறீங்களே...ஏன்?" "செருப்பைக் கழற்றிவிட்டு எடை பார்க்கணும்னு போட்டிருக்காங்களே...!"

முதிர்கன்னி



 எங்கே எனது ஷாஜகான் ???
 இறந்த பிறகு எனக்கு வேண்டாம் தாஜ்மஹால்
 இருக்கும் பொழுது ஒரு குடிசை கொடு!!!!!!!!

அன்பு (love)

   அன்பு என்பது கண்ட கண்ட இடங்களில் பூக்கும்
         காட்டு மலரல்ல!
      நெஞ்சத்தில் உறவாடும் பாசமலர்!!!