திங்கள், 17 ஜூன், 2013



நான்,

பல்லாங்குழி ஆடிய திண்ணைக்கும்
பாண்டி ஆடிய தெரு வீதிக்கும்

பட்டம் விட்ட மொட்டைமாடிக்கும்
பாடித் திரிந்த வயல் வெளிக்கும்

துரத்திப் பிடித்த தும்பிக்கும்
பிடிக்காமல் விட்ட பட்டாம்பூச்சிக்கும்

கையில் ஏந்திய ஆட்டுக் குட்டிக்கும்
காத்துக் கிடந்த கனமழைக்கும்

விழுந்து விழுந்துக் கற்ற மிதிவண்டிக்கும்
விரட்டிச் சென்ற டயர் வண்டிக்கும்

திருடித் தின்ன மாங்காய் தோப்புக்கும்
திட்டித் தீர்த்த காவல்காரனுக்கும்

மறக்காமல் சொல்லிடுமா இந்த ஊர்க் குருவி
ஊர் வருகிறேன் என்று..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக