உயிரே...
என்னருகில் உறவுகள்
ஆயிரம் இருந்தும்...
என்னருகில் நீ
இல்லாததால்...
கானகத்தில் நிற்கும்
தனி மரம் போல்...
என்னுள் சலனங்கள்...
உன்னோடு நான்
இருக்கும் ஒவ்வொரு வினாடியும்...
பல உறவுகள்
என்னுடன் இருபதுப்போல...
ஓர் உணர்வு...
என்னை நீ
பிரிந்த போது...
உன் நினைவுகள்
அவ்வபோது வந்து செல்லும்...
சுகமாகவும்
சோகமாகவும்...
தனிமையை
ரசித்தேன் அன்று...
உன்னை கண்ட நாள்
முதல் வெறுத்தேன் தனிமையை...
இன்று தனிமைதானடி
சுகமாக...
என் உயிரே
வருவாயா என்னருகில்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக