திங்கள், 25 பிப்ரவரி, 2013

உங்களுக்கு தெரியுமா??




வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..
...
புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.

சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.

வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.

எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.

வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

பிரிவு ..


பல நாட்கள் பழகி ஒரு நாளில் பிரிந்து போகும் நாளை விட
பிரிந்த பல நாட்கள் கழித்து ஒரு நாள் சந்திப்போமே!!

வாழ்க்கை தத்துவங்கள்!!!


வாழ்க்கை என்பது பனைமரம் போல
ஏறினா நுங்கு,விழுந்தா சங்கு...
நீ செய்யும் தவறு கூட புனிதமாகும்
அதை நீ ஒப்புக்கொள்ளும் போது!!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை!
நினைத்தது எல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கை வேஸ்ட்,
நினைக்காதது நடந்தால் வாழ்க்கை டேஸ்ட்!!
மனசுக்கு பிடிச்சவங்க முன்னாடி அழுவதும் கஸ்டம்,
மனசுக்கு பிடிக்காதவங்க முன்னாடி சிரிக்கிறதும் கஸ்டம்!!!
 

சங்கத்தமிழ்(தொண்ணூறுக்கும் மேற்பட்ட மலர்கள்)

சங்கத்தமிழ்(தொண்ணூறுக்கும் மேற்பட்ட மலர்கள்)
''உள்ளகம் சிவந்த கண்ணேம் வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல்,அனிச்சம்
தண்யக் குவளை,குறிஞ்சி,வெட்சி,
செங்கொடு வேரி,தேமா,மணிச்சிகை
உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ்,கூவிளம்,
எரிபுரை,எறுழம்,சுள்ளி,கூவிரம்,
வடவனம்,வாகை,வான்பூங் குடசம்,
எருவை,செருவிளை மணிப்பூங் கருவிளை,
பயினி,வானி,பல் இணர்க்காயா,
விரிமலர்,ஆவிரை,வேரல்,சூரல்,
குறீஇப்பூளை,குறுநறுங்கண்ணி,
குருகிலை,மருதம்,விரிபூங்கோங்கம்,
போங்கம்,திலகம்,தேங் கமழ் பாதிரி,
செருந்தி,அதிரல்,பெருந்தண் சண்பகம்,
கரந்தை,குளவி,கடிகமழ் கலிமா,
தில்லை,பாலை,கல் இவர் முல்லை இவ போல் பிறவும்''

புதன், 20 பிப்ரவரி, 2013

கிளி

தன்
எதிர்காலம்
என்னவென்று தெரியாமல்
அடுத்தவர்கள்
எதிர்காலத்தைப்பற்றி
சொல்லி கொண்டிருந்தது
கூண்டுக்குள்
அடைப்பட்ட
கிளி!

தாயின் துடிப்பு

உனக்காய் துடித்த ஓர் இதயம்
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட துடிக்கிறது முதியோர் இல்லத்தில்!
என் மகன் எப்படி இருக்கிறானோ என நினைத்து?

இன்று உலக தாய்மொழி தினம் ..பிப்ரவரி-21


இன்று உலக தாய்மொழி தினம்
ஒருவருக்கு ஒருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பின்னாளில், இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது.



... உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக, பிரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள், ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில், "உருது மொழி' அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள், கோரிக்கை தெரிவித்தனர்.

கடந்த, 1952, பிப்., 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, யுனெஸ்கோ அமைப்பு, 1999ம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.

மௌனம்!

பக்கம் பக்கமாக பேச நினைக்கிறேன்
ஆனால்
உன்னிடம் பேசும் போது மட்டும் ஏனோ
முந்திக்கொள்கிறது
என் மௌனம் !!!

கனவில் உன் சிரிப்பு !!!

நீ சிரிக்கும் போதெல்லாம் சிந்தனை சிதறி
சிறைபட்டு நிற்கிறேன்!!
உன் சிரிப்பனும் பிடியில் மாட்டிக்கொண்ட
கூண்டு
கிளி நான் !!
என் நிலைமையோ தூண்டிலில் அகப்பட்ட மீன் !!
துள்ளித்திரிந்த காலம் போய் எந்நேரமும் துயிலே கதியான ...
எப்போதும் ஏக்கத்துடன் நீ வருவாய் என காத்துக்கொண்டிருக்கிறேன்
கனவில்!!

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

சட்டத்தில் இடம் உண்டா??????



லண்டனில் வாழ்கின்ற ஆங்கிலேயர் ஒருவரை சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய முடியுமா?????
விடை-வாழ்கின்ற ஒருவரை அடக்கம் செய்ய எந்த சட்டத்திலும் இடம் இல்லை.

ஒரு பொருள் கூட்டினால் பதினொன்று,பெருக்கினால் முப்பது அது என்ன???
விடை--ஆரஞ்சு.

உங்களுக்கு தெரியுமா????


ஒட்டகசிவிங்கி 20 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
செந்நரி 8 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

ராணி எறும்பு 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
பாக்டீரியா 20 நிமிடங்கள் வரை உயிர் வாழும்.
யானையின் இதய துடிப்பு நிமிடத்திற்கு 25 முறை துடிக்குமாம்.

பொது அறிவு


1.இளமையை புதுப்பிக்கும் அறிய கீரைகள் எவை ????
         பசலைகீரை, தண்டுக்கீரை.
2.சிவகாசியிலிருந்து பட்டாசுகள் ஏற்றுமதியாகும் முக்கியமான நாடுகள் எவை?
        அமெரிக்கா,கனடா,ஜெர்மனி.
3.டெல்லியின் பழைய பெயர் என்ன?
        இந்திரப்பிரஸ்தம்.
4.உலகிலேயே அதிக நாள் உயிர் வாழும் உயிரினம் எது?
       ஆமை.
5.தபால் தலையில் முதலில் இடம் பெற்ற இந்தியர்--மகாத்மா காந்தி .

பாரதி

 
பாரதி படத்துக்கு பூ தூவ ஆசை
     ஆனால்.....
கையில் இருப்பதோ ஜாதிமல்லி!!!!

திங்கள், 18 பிப்ரவரி, 2013

malli poo idly---joke

சென்னை ஹோட்டலில்.. "மதுரை மல்லிப்பூ இட்லி கேட்டு 1 மணி நேரம் ஆகுது... இன்னும் வரலையே...?" "மதுரை என்ன பக்கத்துலய இருக்கு.. உடனே கெண்டு வர.."

kichu kichu.....

"ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." "ஏன்..?" "பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.."

தாய்

ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்...

பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு...


... ஒரு கவளம் சோற்றை கூட

அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!

ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்கிறது...


உலக அதிசயம்..!


எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்

கருவறையை விட பாதுகாப்பான அறையை

குழந்தைக்கு யாரால் தர முடியும்..???


இறைவனின் வல்லமைக்கு இதனை விட

சான்று வேண்டுமா..???


இது பெண்மையின் மறுபிறவி…!


பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது,

பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்–ஆனால்

இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்......!!!!


குழந்தையாய்…

சிறுமியாய்…

குமரியாய்…

மனைவியாய் வளரும் உறவு

தாய்மையில் தான் தன்னிறைவு பெறுகிறது..!


கொஞ்சும் போது

தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே

தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்...!


நள்ளிரவில்,

குழந்தையின் அழுகை எல்லோருக்கும் எரிச்சல்,

தாய்மைக்குத் தான் பதட்டம்.....!!!


தாய்மையின் மகத்துவத்தை எத்தனை

தத்துவமாயும், தத்ரூபமாயும் சொல்லலாம்.





"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதென்று"…

அனாதை இல்லம்


வீட்டின் பெயரோ அன்னை இல்லம்
அன்னை இருப்பதோ அனாதை இல்லம்!!!
என்ன கொடுமை சரவணா?

தாயே நீ !!!!!

தாயே நீ போட்ட எச்சில் தான்
நானும் ,எனக்கு பின் வரும் எனது
சந்ததியினரும் !!!!

அம்மா

 இந்த உலகத்தில் கடவுளுக்கு எப்படி உவமை இல்லையோ
அப்படியே உனக்கும் உவமையாக காட்ட வேறில்லை தாயே !!!!!
 

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

கவிதா

      உன் பெயரை கேட்ட பிறகு தான் தெரிந்தது
உன் பெற்றொருக்கும் கவிதை எழுத
தெரியும் என்று!!!!

thalaivar joke..ha ha ha

"தலைவர் அதிகமா முற்போக்கை விரும்பறாரா? பிற்போக்கை விரும்பறாரா? "ரெண்டையும் விட அதிகமா பொறம்போக்கைத்தான் விரும்புகிறார்."

doctors joke..

"போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?" "எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே, நர்ஸ்!"

doctors joke

நோயாளி: "இருமல் நிற்க மாட்டேங்குதுங்க...?" டாக்டர்: "அப்படின்னா அங்க உட்கார வையுங்க...! இல்ல படுக்க வையுங்க...!"

tamil jokes- weighing machine

"எடை மிசினில் ஏறி செருப்பைக் கையில் வச்சுக்கிட்டு எடை பார்க்கிறீங்களே...ஏன்?" "செருப்பைக் கழற்றிவிட்டு எடை பார்க்கணும்னு போட்டிருக்காங்களே...!"

முதிர்கன்னி



 எங்கே எனது ஷாஜகான் ???
 இறந்த பிறகு எனக்கு வேண்டாம் தாஜ்மஹால்
 இருக்கும் பொழுது ஒரு குடிசை கொடு!!!!!!!!

அன்பு (love)

   அன்பு என்பது கண்ட கண்ட இடங்களில் பூக்கும்
         காட்டு மலரல்ல!
      நெஞ்சத்தில் உறவாடும் பாசமலர்!!!