செவ்வாய், 18 ஜூன், 2013

பொது அறிவு:- *




பொது அறிவு:-

* 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி.

* `லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்.

* `வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது, ஏலக்காய்.

* பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.

* இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்).

யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.

நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.

உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.

எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.

முதலைக்கு 60 பற்கள் உண்டு.

* உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.

* வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'.

* இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.

* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.

* `கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட்.

* கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'.

* காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.

* `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு.

* `திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம்.

திங்கள், 17 ஜூன், 2013

பெண் என்னும்!!!!!!
கருவில் அரும்பி
உருவம் தரித்து
பருவம் அடையுமுன்
பலப்பல பக்குவங்கள்...
பதறாமல் பெறுபவள்...!
அரும்பும் மலராய்
அழகாய் மணம்வீசி
அன்பின் ஆழத்தை
அனைவரிடமும் காட்டி
வலம் வருகின்ற
வண்ணத் தேர்...!
எதையும் இயன்றவரை
எடுத்துச் செய்திடும்
உறுதியான உள்ளத்துடன்
உலகை வலம் வரும்
உன்னத படைப்பு...!
அகத்தில் அன்புடனும்
புறத்தில் பண்புடனும்
பெண்மைக்கு உண்மையுடனும்
பிரமிக்கும் திறமையுடனும்
பிரகாசிக்கும் சுடர்...!
பொறுமைக்கு இலக்கணமாய்
புனிதத்திற்கு பொருத்தமாய்
அடக்கம் அறிந்தவளாய்
அகங்காரம் தொலைத்தவளாய்
அன்பிற்கு பணிபவள்...!
ஆயிரம் அலுவல் செய்தும்
அலுக்காத அன்னையுள்ளம்...
அன்பாய் ஓர் வார்த்தைக்காய்
அடை காக்கும் பெண்ணுள்ளம்...!



நான்,

பல்லாங்குழி ஆடிய திண்ணைக்கும்
பாண்டி ஆடிய தெரு வீதிக்கும்

பட்டம் விட்ட மொட்டைமாடிக்கும்
பாடித் திரிந்த வயல் வெளிக்கும்

துரத்திப் பிடித்த தும்பிக்கும்
பிடிக்காமல் விட்ட பட்டாம்பூச்சிக்கும்

கையில் ஏந்திய ஆட்டுக் குட்டிக்கும்
காத்துக் கிடந்த கனமழைக்கும்

விழுந்து விழுந்துக் கற்ற மிதிவண்டிக்கும்
விரட்டிச் சென்ற டயர் வண்டிக்கும்

திருடித் தின்ன மாங்காய் தோப்புக்கும்
திட்டித் தீர்த்த காவல்காரனுக்கும்

மறக்காமல் சொல்லிடுமா இந்த ஊர்க் குருவி
ஊர் வருகிறேன் என்று..